பிள்ளைகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த தாய்!
கணவன் தினமும் மது அருந்திவிட்டு தன்னையும் 6 பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்தி வருவதால் தனக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு 37 வயதுடைய பெண் காவல்நிலையதில் பாதுகாப்புத் தஞ்சம் கோரியுள்ளார். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் காவல்நிலையதில் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் தனது 4 பெண் பிள்ளைகள் உட்பட 6 பிள்ளைகளுடன் பாதுகாப்புக் கோரியுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் ஆறுபிள்ளைகளையும் தாயையும் சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed